ஆசானுக்கு நன்றி


உன் தோல் தொட்டவனெல்லாம்
உத்வேகத்துடன் உயரும்போது
உனக்கென்ன நீயும் சிறந்தவெனென 
உற்ற நேரத்தில் அதற்குரிய காலத்தில்
உளவியல் ரீதியாக எடுத்துரைத்து
உற்சாகம் கொடுத்து இப்படி செய்யென
உத்தரவு பிறப்பித்து இவுலகில்
உனக்கு நிகர் நீயே என
உரைப்பவர் ஆசான்...........!

உறுதியான சிந்தனை கொள்
உயர்வான எண்ணம் கொள்
உண்மையாய் நடந்து கொள்
உழைத்து பிழைக்க கற்று கொள்
உதவிட பழகு  பிறரை
உதாசீன படுத்தாதே பிறருக்கு
உதாரணமாய் இரு என
உயர்வுக்கு வழிகாட்டுபவர் ஆசான்.......!

 உலகிற்கு அறிவின் ஜீவிகளையும்
உலகறியும் அறிவியலாளர்களையும்
உருவாக்கியது  தாம்தானென 
உள்ளத்தில் கர்வம் கொள்ளாமல்
உள்ளுணர்வோடு உழைத்திடும்
உயர்ந்த நற்பன்பன்புகளுக்கு
உரியவர்  ஆசான்......!!

உலகின் எம்மூலையில் இருந்தாலும்
உலகமே போற்றுமளவிற்கு வாழ்ந்தாலும்
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பது போல்
உடல் பொருள் ஆவியை தொலைத்து
உன் அறிவை பெருக்கி
உலகளவு உயர்த்திய  ஆசானை
உயிர் உள்ளவரை
உள்ளத்துள் நினைபோமென
உறுதிமொழி ஏற்போம்.......!!

Comments