மீண்டும் பள்ளிக்கு போகலாம்



தினமும் மனதினில்
நினைவுகள் மலரும்
கனவிலும் நினைவிலும்
கனம்  தோன்றி மறையும்...

பட்சணங்கள் வகுப்பறையில்
மிச்சமின்றி தீர்ந்துவிடும்
சச்சரவு பல இதனால்
உச்சம் தொட்டு விடும்...

நெஞ்சம் நிறைந்த நினைவுகளாய்
பஞ்சமில்லா கேலிகளிருந்தும்
கொஞ்சமும் நஞ்சில்லை
பிஞ்சுகளின் ஈரநெஞ்சில்

கண்ணை கவர்ந்தவர்கள்
கடந்து செல்கையில்
கண்களில் மின்மினி
கண்சிமிட்டி மறைந்திருக்கும்...

கனவுகளை நினைவிலேந்தி
கணக்காய் புத்தகஞ்சுமந்து
கற்றவர்களின் அறிவுறுத்தலால்
கற்றுணர்ந்து தேறியிருப்போம்....

கடக்கையில் பள்ளியை
நடந்தவைகள் மிளிரும்
நண்பர்களின் சீண்டல்கள்
என்பதிலும் நிகழும் ...!!


Comments