இயற்கையாக நீ!
பெண்ணே!
உன் நெற்றி திலகம்
வண்ண கோலமாய்
உன் இதழ் தேனிக்கள்
சுவைக்கும் மகரந்தமாய்
உன் அழகு முகம்
பௌர்ணமி நிலவாய்
உன் சுவாச காற்று
வருடும் தென்றலாய்
உன் கருங்கூந்தல்
கார் மேகமாய்
உன் முத்து பற்களின் பளீர் சிரிப்பு
சலசலக்கும் மழையாய்
உன் மயில்விழி பார்வை
வெட்டும் மின்னலாய்
உன் நா உதிர்க்கும் ஒவ்வொரு
வார்த்தையும் பேரிடியாய்
என இயற்கையாக நீ!
இயற்கையின் பல பரிணாமங்களில் - நீ!!
-சுந்தரசுதர்சன்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
ReplyDeleteநான் இந்த பகுதிக்கு புதியவன் என்னுடைய முதல் படைப்பை இங்கு பதித்துள்ளேன் என்னுடைய பதிப்பை பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்களை பதிந்து என் எழுத்து முயற்ச்சியை ஊக்குவிக்க கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு உங்கள் -சுந்தரசுதர்சன்
suthar super blog useful blog this is
ReplyDeletefrm rajeshavr (rajaganapathy)
ok rajesh
ReplyDeletehi anna super excellant very nice anna keep it up anna......
ReplyDelete