மழை நீரை சேகரிப்போம்!....

சேகரிப்போம்! மழை நீர் சேகரிப்போம்!!(2)
ஏரி குளங்கள் நிரம்பிடவே
நீரும் நிலத்தடியில் சேர்ந்திடவே
மனிதன் மகத்துவம் பெற்றிடவே
வான் தரும் மழை நீரை
சேகரிப்போம்! மழை நீர் சேகரிப்போம்!!(2)
ஏரிக்கரைகள் ஓங்கிடவே
நீரின் அளவை உயர்த்திடவே
குடும்பம் யாவும் செழித்திடவே
குளங்குட்டை வெட்டி வைத்து
பணிசெய்வோம் ! துப்புரவு பணி செய்வோம் !!(2)
வளங்கள் யாவும் பெற்றிடவே
வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவே
கரைகள் யாவும் ஒங்கச் செய்து
மரஞ்செடிகள் நட்டுவைத்து
காத்திடுவோம்! பசுமை காத்திடுவோம்!!(2)
நிலத்தின் வளம் உயர்ந்திடவே
நீர் நிலைகள் நிரம்பிடவே
மனித குளம் தழைத்திடவே
மாந்தர் குறை களைந்திடவே
சேகரிப்போம் ! மழை நீர் சேகரிப்போம் !!(2)

. உங்கள் - சுந்தரசுதர்சன்

Comments