இனி ஒருத்தி

வட்ட முகம்
மீன்விழிகள்
சிறியதாய் மூச்சு துவாரம்
முத்துக்களை அள்ளி தெளித்தார்
போல் பல்வரிசை
சிவந்த உதடு
கார் கூந்தல்
அழகான வகிடு
இரு நீளகைகள்
மெல்லிய விரல்

வளைந்து தெளிந்த தேகம்
அன்ன நடை போடும் பாதம்

வெண்ணிற
மேனி

நிலவு கூட தோற்று போகுமடி
உன் அழகுக்கு முன்னால்

உன்னையே உற்று நோக்கியதில்
உணர்வுகளை வெளிகாட்டி
உதடுகளால் உச்சரிதாயே
நீ எனக்கு மட்டும்தான் என்று
என்னுள்ளே ஆயிரம் மின்னல்
தோன்றி மறைவதற்குள்
வரும் பௌர்ணமி திங்கள்
திருமணம் என்று
பேரிடியாய் முழங்கி விட்டாயே ?

அதோடு நிறுத்தி இருந்தால்
பசுமை நினைவுகளை சுமந்து
காலம் கடத்தி இருந்திருப்பேன்
திருமணத்திற்கு சொல்லுங்கள் என்றது
என் நெஞ்சில் முல்லாய் தைக்கிறது பெண்ணே
உன்னை மட்டுமே சுமந்த
என் இதயத்தில்
இனி ஒருத்தியை
நினைத்து பார்க்க எப்படி பெண்ணே முடியும் ......?

அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

Comments