கொல்வாயா

அன்பே காற்றில் உன்
சுவாசம்
தேடி அலைகிறேன்
என் சுவாசமாய் மாற்ற

நீ எங்கிருந்தாலும் சுவாசி
உன் சுவாசத்தை நான் இனம்
கண்டு கொள்கிறேன்

உன் சுவாசம் எனகாகதான்
என்ற போதும் நீ
(சு)வாசம் செய்ய மறந்ததேன்

நான் உன்னை நேசித்து
விடுவேன் என்பதாலா
இல்லை சுவாசித்து
விடுவேன் என்பதாலா

இல்லை நீ (சு)வாசம் செய்தும்
உன் நினைவிலே சுழலும் நான்
சுவாசிக்க மறந்தேனா..

என் சுவாசம் அதுதான்
என்று தெரிந்து
இயற்கையே சதி செய்கிறதா...

என்னவளின் சுவாச காற்றை
சுமந்து வரும் தென்றலே
என் சுவாசத்தை எனக்காக
கொணராமல் என்னை கொல்வாயா...?

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments