வாழ்வதும் வீழ்வதும்

என் இதய கூட்டில்
குடிருப்பவளே
என் நினைவிலே
எப்பொழுதும் சுழல்பவளே

எங்கே சென்றாய்
உன்னை காணாது
நொடியும் யுகமானது
பெண்ணே........?

என் தவிப்பை
உனக்கு எப்படி எடுத்துரைப்பேன்
என்ன சொல்லி புரிய வைப்பேன்
நீ எனக்கானவள் என்று

நினைவில் நிழலாய்
தொடர்பவளே
நிஜமாய் ஆவது
எப்போது.....?

கடிதம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல்
தூது சென்ற
அணைத்து உக்திகளுக்கும்
பதில் எப்போது .?

உலக காதலுக்கு ஒரு தினம்
உண்டெனில்
நீ மௌனம்
கலைக்கும்
தினம்
நம் காதலின் தினம்

நான் வாழ்வதும் வீழ்வதும்
உன் கைகளில்
நீ என்ன சொன்னாலும்
எனக்கு சம்மதம்தான்

எனக்கு பேதம் பிரித்து
பார்க்க தெரியாதடி பெண்ணே
காதல் சாதல் இரண்டுமே
எனக்கு சுகம்தான்

காதல் என்றால் உன்னோடு
வசந்த வாழ்வு
இல்லை என்றால் உன்
நினைவோடு சேர்ந்த மறைவு

வாழ்ந்தால் உன்
இதய கருவறை
இல்லை மரித்து
வீழ்ந்தால் கல்லறை

கருவறை சுகம் நிஜம் என்றால்
கல்லறை சுகம் நிழல்
நான் நிஜமாவதும் நிழலாவதும்
உன் பதிலில்தானடி பெண்ணே......?

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments