கவிதை நிறைந்திருக்கும்

சமுகத்தில் ஒரு மாற்றம் என்னால்
நினைக்கும் போதே
என்னுள் கர்வம்
ஆனால் எனக்கு சமுகம் குடுத்த
பட்டம்
இருமாப்புடையவள்
இரக்கமில்லாதவள்
இதயமில்லாதவள்
இன்னும் பல....

நான் செய்தததில்
பிழை என்ன இருக்கிறது
அனைவர் நினைவிலும்
கவி விதை விதைக்க
பட்ட பாடு
அப்பப்பா.......

எத்தனை இன்னல்கள்
எனக்கு துளியேனும்
வருத்தம் இல்லை
கவிதை நிறைந்திருக்கும்
விருட்சங்களாக
இப்பூவுலகை
மாற்ற
எனக்கு
கிடைத்த ஒரு
வாய்ப்பாகவே
கருதுகிறேன்

அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments