என் வரம்

என்னை காண வேண்டி
இறைவனை நாடிய
என்னவளே
உன் உள்ளத்தில் கரைந்து போன
எனை
புல்லாங்குழலை போல்
பல கண் பெற்றாலும்
காண இயலாது
உன் மனக்கண் தவிர....

உன்னையே
என் வரமாய் பெற்றிட
நான் கொண்ட தவத்தின்
பலன் நீ
பிறகெதற்கு
தனி வரம்....?


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

Comments