வரம்......!

தாயே ......
நீ முந்தி கொடுப்பது இருவருக்கு
ஒன்று தந்தைக்கு
மற்றொன்று எனக்கு

தந்தைக்கோ ஒருமுறை
நான் உன் கருவில்
எனக்கோ பலமுறை
முதல் நடை நடக்கையில்
அழும்போது கண்ணீரை ஒற்றி எடுக்கையில்
போர்வையாய் நான் தூங்கையில்
குளித்து துடைக்கையில்
மழையில் நனைந்த எனை அணைக்கையில்
இப்படி என் எல்லா செயலும் முந்தியில்

பிள்ளை பிராயம் முதல் உன்
அணைப்பில் தூங்கியவனாயிற்றே
நான் சவமாகி போனாலும் எனை
மூடுவது உன் முந்தியாக இருக்கட்டும்
உன் அரவணைப்பில் நிரந்தரமாய்
தூங்கி போகிறேன் ......

விழியை இமை காப்பது
போல் காத்தவளே
மறுபிரவியுலும்
உனக்கே கருவாகி
இப்புவியில் உருவாக
வரம் தா......!

Comments