முதல் இரவு

##முதல் இரவு##


ஏகாந்தமான இரவு, தனி அறை
கண்ணை பறிக்கும் மின் விளக்கு
குளிர்ச்சியான சிலிர்க்காற்று,
நறுமணம் கமழும் மல்லிகை
அறைக்குள் நுழையும் எனக்குள் குழப்பம்

தனியாக கையாள முடியுமாவென  கலக்கம்
மனதில் எதிர்பார்ப்புடன்  பயம் படபடப்பு
இதயமே நின்றுவிடும்  துடிதுடிப்பு
அங்கோ ஓர் மூலையில் சலனமுற்று
கிடந்த அவளை கண்டு,

மெல்ல அவளிடம் சென்று
என்னானதோ என்ற தவிப்பில் 
மெல்ல தட்ட அவள் வெட்கத்தோடு
விழி திறந்து  என்னை நோக்க
நான் அவளை நோக்க,

பயம் படபடப்பு முற்றிலும்  போய்
ஆர்வம் என்னை தொற்றி கொள்ள,
மெல்ல அவளை தொட்டு
விரலால் வீணை மீட்ட தொடங்க
ஒவ்வொரு மீட்டலுக்கும் தீண்டலுக்கும்
மகுடிக்கு ஆடும் பாம்பை போல்
இசைந்தவள்  நாதம்  மீட்டிட,

சாமத்தில் சோர்வு என்னை ஆட்கொள்ள
சோர்வில் செய்த தவற்றுக்கு
அவள் ஒழி  எழுப்ப,
தவறை உணர்ந்து நான் திருத்த,
விரலின் வித்தைக்கு கட்டுப்பட்டவள்
இயந்திரம் போல் இயங்க,

பொழுது புலரும் தருணம்
உறக்கம் கண்களை  ஆட்கொள்ள
முதல் இரவை வென்றுவிடட
ஆனந்த களிப்போடு வெளியேறினேன்

வருகின்ற இரவெல்லாம்
 முதல் இரவை போல் அல்லாமல்
கைதேர்ந்தவனாக விரல் மீட்டுவேண் 
தானியங்கி தொழிற்சாலையின்
கணிணி  விசைபலகையை ..........!!!

Comments