வரதட்சணை


வரதட்சணை.......
உனக்கு சமமாகுமா பெண்ணே
வீடு வாகனம்
காசுபணம்
நகைநட்டு
எது குடுத்தாலும் உனக்கு நிகர்
இப்பூஉலகில் ஏதடி பெண்ணே

உன்னை எண்ணி பார்க்கிறேன்
திருமணம் முடித்ததும்
ஆட்கொள்ளும் கணவனுக்கு
ஆட்டுவிக்கும் நாத்தனாருக்கு
ஆடும் மாமியாருக்கு
ஆட்படுவது மட்டும் நீதான்

ஏனோ தெரியவில்லை
எவ்வளவு கொடுத்தும்
உன்னை மகளாக
பாவிக்கும் மனது
எந்த தாயிடமும் இல்லையே
மருமகளாக பாவிப்பவர்
இருக்கும் வரை
எப்பொழுதும் நீ
ஒரு சுமை பொருள்தான்

அரசு திட்டம் தீட்டி
சட்டம் வகுத்தாலும்
வரன் பார்க்க வரும்போதே
வர தட்சணை பேசும்
தாய்மார்கள் இருக்கும் வரை
எப்படி ஒழியும் ..........வரதட்சணை?

உங்கள் -சுதர்சன்சுந்தரம்

Comments