ஏமாற்றம்

பெண்ணே நீ
இயற்கையின் படைப்பா
இல்லை இயற்கையா..........?
எனக்குள் எண்ணி பார்க்கிறேன்
நிலவு
வான்
விண்மீன்
மேகம்
சூரியன்
இயற்கையின் பல பரிணாமங்களில்
எண்ணி பார்க்கிறேன்

நிலவு அழகின் சிறப்பு
வான் பிரதிபலிக்கும் கண்ணாடி
விண்மீன் கண்ணிமைத்து வரவேற்கும் அழகி
மேகம் ஏங்க வைத்து களைந்து போகும் மோகம்
சூரியன் அரவணைப்பில் ................தீ

ஒரு சிறு ஒப்பீடு

பெண்= நிலவு
மிளிர்ந்த தோற்றம்
பட்டொளி வீசும் முகம்
மயக்கும் வசீகரம்

பெண் = வான்
அவள் விசாலமானவள்
எங்கும் வியாபித்திருப்பவள்
பரந்துவிரிந்த குணமுடையவள்

பெண்= விண்மீன்
அழகு மின்மினி
கண் இமைக்கும் கண்மணி
ஒளிர்ந்து மிளிரும் அம்மணி
இந்த பெண்மணி

பெண்= மேகம்
அசைந்து வரும் இடைஅழகி
நகர்ந்து வரும் நடை அழகி
ஊர்ந்து வரும் வெள்ளை உடைஅழகி
பின்னி பிணைந்து வரும் சடைஅழகி

பெண் = சூரியன்
அச்சுருத்தும் அழகு சுந்தரி
அதிகாலை சாந்தக்காரி
அந்திவேளை செஞ்சிவப்பு
காரி
அகிலம் போற்றும் சிங்காரி
அனல் கக்கும் கோபக்காரி....

என்
கண்ணில்

பட்டிட்டள் அழகாய்
பொட்டிட்டவள் என் மனதில்
எட்டிட்டவ
ள் அழகு
பட்டை கட்டிட்டவ
ள்
கட்டில் என்னை
நட்டிட்டவ
ள்

இட்டமானவன் உன் நெஞ்சை
தொட்டிட்டவன் இதய கோட்டை
கட்டிட்டவன் உன்னை
கட்டிப்பவன் உனக்காய்
காத்து கிடக்கிறேன் பெண்ணே
ஏன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்

நிலாபென்னே உன் அழகை கண்டு
காதல் வயபடுவான் என
தேய்ந்து போனாயா...?

மன்னவளே
என்னவளை அழகாய்
பிரதிபலிக்கும் வான் பெண்ணே என்
தோற்றம் கண்டு இருள்சூழ்ந்து போனாயா.....?

விண்மீனே என் பெண் மானே
மினுமினுத்து மினுமினுத்து
முனுமுனுக்க வைத்துவிட்டு
ஒளிந்து கொண்டாயா...?

வெண்மேகமே பொன்தேகமே
என் மோகமே உன்னை
தீண்டிடுவான் என
காற்றில் களைந்து போனாயா ...?

சூரியபென்னே வனப்பிலே மிதமான
செஞ்சூடுகாரியான உன்னை
அணைத்திடுவான் என
சுட்டெரித்து போனாயா...?

எப்படியும் எட்டிடலாம் என
எட்டி எட்டி பார்த்தும்
கிட்டாமல் போனதேன் எல்லாம் இயற்கையின்
எட்டா படைப்பாய் பார்த்ததால்
எட்டாது போனாயா.....?

Comments