உன்னடி சரணம்


மிதமான உன் அன்புக்கு
நிதம் தவித்த வேளையில் 
சம்மதம் சொல்லி
சதமாய் எனக்கு
இதமாய் நீ இருக்க............
மதமென்ன மதம் ..?
மதங்கொண்ட யானையே வந்தாலும் 
எதற்கும் பயமின்றி எதிர்ப்பேன்
வேதங்கள் பேசி,
பேதம் பார்ப்பவர்கள் காதலை
வதம் செய்ய நினைத்தாலும்
நாதமே நீயென உன்னோடு
கீதம் பாடிட உன்
பாதச்சுவடை தொடர்ந்திடுவேன் கன்னே..!

Comments