அன்னைக்கு சமர்ப்பணம்


ஈரைந்து மாதங்கள் சுமந்து 
ஈன்ற செல்வத்தை 
ஈன்ற நாள் முதல் 
இந்நாள் வரை போற்றி பாதுகாப்பவள் 
மழலை பருவம் முதலே
அன்பை பொழிபவள்.

கனபோழுது கண்முன் இல்லையென்றாலும் 
சினங்கொண்டு கண்டிப்பவள்
இவ்வுலகில் இப்படித்தான் வாழனுமென 
அறிவுரை கூறியவள்  
வெளியில் சென்று களைத்து 
வருபவனை அன்பாய் 
அரவனைத்து அமுது படைப்பவள் 

தோல்வியில் சோர்ந்திடும் போது 
ஆதரவாய் பேசி ஊக்கமளிப்பவள் 
களைத்து  வீடு திரும்பியவனை 
மடி சாய்த்து தலைகோதி 
விசாரிக்கையில் விக்னங்கள் 
அத்தனையும்  மறக்க செய்பவள்...
நேராநேரத்திற்க்கு   தேவைபடும் 
அத்தனையும் கேட்கும் முன்னே  செய்பவள்.....

அன்பு பாராட்டி சீராடும் பொது அன்னையாக 
கண்டிக்கும் பொது தந்தையாக 
அறிவுரை கூறும்  போது  ஆசானாக 
தவறை சுட்டிக்காட்டும் சகோதரனாக 
குடும்ப சகிதமாய் கூடிய அரட்டையில் சகோதரியாக 
சுகதுக்கங்களில்  பங்குகொள்ளும்போது  நண்பனாக 
இப்படி பலமுகம் கொண்டவள்...

பணம் படைத்த 
சனங்களுக்கு மத்தியில் 
குணம் படைத்த என் அன்னைக்கு 
இப்பூவுலகில் எதுவுமே ஈடாகாது...!
 இப்பிறவியில்  என்னை வளர்க்க நீ பட்ட 
கடனை ஏழேழு ஜென்மத்திலும்  
அடைத்திட முடியாதம்மா.....

இன்னும் எத்தனை பிறவி உண்டோ
அத்தனை பிறவியிலும் உனக்கே 
மகனாக பிறந்து 
இப்பிறவியில் மட்டுமல்லாது 
இனி வரும் பிறவியிலும்  என் 
அன்னையை  போற்றி பாது காக்கும் 
வரத்தை அருள்வாய் இறைவா....!!

Comments