சாதலா ...! சாடலா .....!


காதலை உணருபவன் மனம் 
குதுகலிக்கும் ஆடலிலும் , பாடலிலும் 
அதனால்தானோ என்னவோ?
கவிஞன் அழகாய்  சொன்னான்
காதல் காதல்  காதல்
காதல் இல்லையேல்  சாதல்....!
அந்த காதலின் நாடலுக்கு 
காதல் என்ற ஒற்றை சொல் 
கொண்டு காதலுக்கு மடல் வரைதலில் 
எத்தனை  தேடல்
கடலை விட பெரியது இந்த 
காதலின் தேடல் 
தேடலில் கிடைத்த
புனிதமான காதலில்
எத்தனை சீண்டல்.......
எத்தனை கிண்டல் ........
காதல் சீண்டலோடும்  , கிண்டலோடும்
நின்று விடாமல்  
தீண்டல் என்ற எல்லை தாண்டலால்
புனிதம் இழந்து போவதால்
காதலுக்கு இறுதியாய்
கிடைப்பது  பலரின் சாடல்.....! 

Comments