காத்திருக்கிறேன்......!!

பருவ வயதில் காதல்
அனைவர்  மனதிலும் வந்து செல்லகூடிய
ஒரு நிகழ்வுதான் என்றாலும்
அனைவரும் காதல் வசபடுவதில்லை
பலர் மனதில் பூட்டியே வைப்பதும் 
சிலர் எளிதில் வீழ்ந்து விடுவதும்  பிறகு
ஏன் வீழ்ந்தோம் என தவிப்பதும்
இயற்கை யாகிபோனது...

இதுவரை காதல் கொண்டதில்லை
என்றாலும் சில பல
காதலை கண்டிருக்கிறேன்
நான் கண்ட காதலில்
சிலவற்றை தவிர
பல காதல் ஒற்றுமை இல்லாமல்
ஒட்டாமல் சென்றது அதிகம்
என்பதால் மணமான பின்
மனம்கவர இருக்கும்
கள்ளி  உனக்காகவே
காத்திருக்கிறேன் பெண்ணே..........!

மணமுடித்த பின் வரும் காதலுக்கு
பலம் அதிகம் என்பதாலும்
காத்திருந்து வரும் காதலுக்கு
சுகம் அதிகம் என்பதாலும்
அந்த வலிமை மிகுந்த காதுலுக்கு
வலியோடு தனிமையில் காத்திருக்கிறேன்......!!

Comments