இனிய சகோதரியே நீயும் உன்
இதயம் கவர்ந்தவனும்,
இருவேறு நாட்டில் வசித்தும்
இணையத்தின் உதவியால்
இருமனங்களும் இணைந்து
இருமனதும் ஓர்மனதாகி
இணக்கம் கொண்ட இதயங்கள்
இருவீட்டாரின் ஆசியுடன்
இசை வாத்தியங்கள் முழங்க
இந்திரன் முதலான தேவர்கள் பூமாரி பொழிய
இனமான நண்பர்களும் உறவும் வாழ்த்த
இரு இதயங்களும் திருமணம் கண்டு
இல்லறத்தில் நல்லறம் காணபோகும்
இனிய உறவுகளே.......
இத்தருணம் முதல் உங்கள் வாழ்வில்
இன்னல் இல்லா வாழ்க்கையும்,
இல்லாமையும் நீங்கிடஇயலாமையை களைந்து எத்தனை
இடர்கள் வந்தாலும் வருந்துதற்குரிய
இக்கட்டான நிலை வந்தாலும்
இம்மியளவும் தளர்ந்திடாது
இவ்வுலகில் சீரும் சிறப்புமாய் இருக்க
இறை அருள் பெற்று
இப்படித்தான் வாழனுமென
இலக்கணம் வகுத்து
இலட்சிய பாதையை எட்டி
இழிசொல்லுக்கும் பழி சொல்லுக்கும்
இடங்கொடாமல் பல்லாண்டு காலம்
இனிதாய் வாழனும்.....!
இருள் சூழும் வேளையில்அலுவல் முடித்து
இல்லம் திரும்பும்
இன்னுயிர் கணவனுக்கு
இன்முகம் காட்டி
இதமாய், நயமாய், கனிவாய்
இனிய சொல் பேசி,
இதழ் பதித்து இன்புற்று,
இளமையான மனதுடனும்,
இனிமையான குணத்துடனும்
இசையின் ஸ்ருதியும் லயமும் போல
இணைபிரியா தம்பதியாய்
இனிய வாழ்வை மேற்கொள்வீர்.....!!
Comments
Post a Comment