வலி


கல்லூரியின் துள்ளி திரிந்த நாட்களில்
 நீ செய்யும் நற்செயல்களை
கண்டதும் கொண்டேன்
காதல் உன்மீது...........
சொல்லிகொள்ளும் அளவிற்கு
பேரழகி இல்லையெனினும்
என் கனவு தேவதை நீ.....
உணர்வும் உயிரும் உன்னையே சுற்றிவர
உடல் முழுதும் ரசாயன  மாற்றம் ஏற்பட ..........
மனதோடு நித்தமும்
போரிட்டு போரிட்டு  நெஞ்சினுள்ளே
பூட்டி வைக்க முடியாமல்
ஒருநாள் வெளிபடுத்த
உன் எண்ணமும் அதுவே என்றதும்
ஒரு இனம் புரியா குதூகலத்தில்
வானத்திற்கும் பூமிக்குமாக
துள்ளி குதித்தது மனம்..........

ஈருடல் ஒருயிராய்
இருவரும் காதலில் திளைத்திருக்க
முன்பொருமுறை உன்னால்
அவமதிக்கப்பட்ட காமுகனுக்கு
நாம் காதலராய் வளம் வருவது
பொறுக்க முடியாமல்
கூட்டாளிகளின் துணையோடு
காமம் தலைகேறி உன்னை சிதைத்திட....
என்னை நெருங்கிய  தருணங்களில்
மணமானபின்தான் உன்னவளென
தட்டிக்கழித்து வந்தேனே.....
தங்களுக்கு முழுதும் அற்பனிக்காமல்
வாழ்விழந்து விட்டேனென
வாடிய வாடா மலரே ....!
வருத்தம் கொள்ளாதே
இப்பிறவி உன்னோடுதானென எவளவோ 

தேற்றியும் என்னை கருத்தில் கொள்ளாது
காலம்சென்றது ஏனோ.........?
நீ இல்லா புவியில்
வாழ்ந்திடுவேனென நினைத்தாயோ.....?
அனுதினமும் உன்னோடு வளம் வந்த 
வசந்த நாட்களை அசை போட்டும் 
அணு அணுவாய் இம்சிக்கிறது 
அர்த்தமில்லா பொழுதுகளாய்...,...
அன்பே உன்னை நினைத்து
அர்த்தமில்லாமல் வாழ்வதை விட 
இப்பிறவியை அர்த்தமுள்ளதாய் ஆக்கிட
உன் வழியை  தொடர்கிறேன்......

வழி கொடு இறைவா
அவளோடு சேர்ந்து வாழ்ந்திட......!!

Comments