வாழ்க்கையை தேடி

மாலையிட்டவளோடு வசதியாய் வாழ
வழிதேடி நெடுந்தொலைவு வந்து
வாழ்வதற்கேற்ற செல்வம் சேர்த்தும்
வஞ்சி அவளை காணாமல்
வஞ்சிக்க படுவேனென
அஞ்சி அஞ்சியே  நீண்ட பயணம் - இன்று
சாயுங்காலம் ஆவதற்குள்
சாந்தபடுத்திட
சாரட்டு வண்டியில்  தொலைதூர பயணம் ......

மஞ்சள்பூசிய பார்மகளை
மையல் கொள்ளும்
விண்ணவனின்  தழுவலால்
பார்மகள்  நானிடும்
அந்தி சாயும் வேளையிலே
கால்நடை மேய்க்க சென்ற
காளையரும் கணிகையரும்
களைப்பாற வீடு திரும்பிட
கயல்விழியாளை  கண்டுவிடுவோமா....
கண்டு  கன்னம்தழுவிடுவோமா என
விரிகிறது என்னபயணம்..?

தனம் தேட வந்தும்
தளிராய் தனித்து
தவித்திருக்கும்
யுவதியை சுற்றியே என்
எண்ணமும் செயலும்...
இதயத்தில் குடிகொண்ட
இந்திரலோகத்து அழகி
இரம்பையாம் என்
இதயராணியை நினைத்துவிட்டால்
இயந்திரத்தால் ஆற்றமுடியாத  வேலைகளும்.
இலகுவாகும்...........!

என்ன அலைகளில் உள்ள
என்னவளின்  அழகின் முன்
மின்னும் நட்சத்திரமும்
வின்னின் நிலவும்
மண்ணின்  பலவும் தோற்றுபோகும்

தன்னவன் வருவானேன என்மீதே
திண்ணமாய் இருக்கும்
மன்னவள்  மதிமயங்கி
தன்னிலை மறந்து துயரிலிருக்கும்
அன்னவளை அணைத்து அவளின்
கன்னமதில் இதழ் பதித்து என்
எண்ணிலடங்கா ஆசைகளை
எண்ணத்தில் நிறுத்தி
எண்ணியதை செயலாக்கிட
எத்தனித்து  புறப்பட்டுவிட்டேன் ...
என்னவளோடு சேர்ந்திட...!!

Comments