தீபஒளி திருநாள்......!!

அசுரனை அழித்துவிட்டதற்காய்
அனைவரும் ஆனந்த களிகூத்தாடும்
அந்நாளே தீபஒளி  திருநாள்......!!

ஆடம்பரமாய் அற்ப சுகத்திற்கு
ஆயிரமாயிரமாய் செலவு செய்யாமல்
ஆத்மார்த்தமாய் தீபம் ஏற்றி வழிபடுவோம்..!

இல்லாதோர் வாழ்வில்
இருளெனும் அரக்கனை விளக்கி
இன்பம் பொங்கிட
இயன்றளவு உதவிடுவோம்....!

அதிகாலை எழுந்து
அன்னையரின் கையால்
எண்ணெய் குளியலிட்டு
புத்தாடை அணிந்து
அண்டை அயலாருக்கு பாதிப்புமிகாமல்
அதிகஒலி உள்ள வெடிகளை  வெடித்து
இயற்கைக்கு பங்கம் விளைவிக்காமல்
ஒளி தரும் தீபமேற்றி
சப்தமில்லா மத்தாப்பை கொளுத்தி
ஆனந்த கூச்சலிட்டு
இனிப்புண்டு  இன்பமயமாய்
உற்றார் உறவினரோடு கொண்டாட
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!!



Comments