தோற்றுபோவது தொடர்கிறது.........?

உள்ளத்து ஆசைகள் எல்லாம்
உள்  நெஞ்சிலேயே புதைந்து
உள்ளுக்குள்ளே ஆரவாரம் செய்கிறது

உள்ளங்கையின்  பிடிக்குள்
உன் கரங்கள் என்று வருமென
உள்ளம் களி கொள்கிறது

உன்னிடம் வெளிபடுத்த
வெள்ளமாய் உந்தி வரும்  காதலை
உள்ளத்துள் அணையிட்டு கொள்கிறது

தொலைந்து போன ஏதோ ஒன்றை
காற்று தொடாத அறைகளுக்குள்
ஏக்கம் கலந்து தேடுகிறது

ஆற்றலும்  ஏற்றமும் நீயின்றி
சாத்தியப்படாது  என்பதால்  உள்ளம்
மாற்றங்களுக்கு யாசிக்கபடுகிறது

மாற்றங்கள் வேண்டி யாசிக்கபட்டும்
உள்ளம் கனந்து  இருள் சூழ்ந்து
தோற்றுபோவது தொடர்கிறது.........?

Comments

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment