அன்று
ஆங்கிலேயனிடம் சிக்குண்டோம்
அவனின் சூழ்ச்சியால் சிதறுண்டோம்
அடிமைகளாய் கட்டுண்டோம்
அல்லல் பல அனுபவித்தோம்
அல்லல் களைந்திட
அடிமைத்தளை அகற்றிட யாவரும்
இந்தியராய் ஒன்றிணைந்து கிளர்த்தெழுந்தோம்
வந்தேமாதரமெனும் ஜெயகொஷமிட்டோம்
அண்ணலின் அறப்போராட்டத்தால்
அவர்களின் அதிகாரத்தை புறந்தள்ளி
அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம்
சுதந்திர காற்றை சுவாசித்து
ஆனந்த கூத்தாடி மகிழ்ந்தோம்....!
இன்று
உலகறிய பெற்ற சுதந்திரத்தால்
சாதித்தது என்ன....?
காணும் இடம்யாவும் கற்பழிப்பு,
கலாசார சீரழிவு, கையூட்டு,
கொலை, கொள்ளை,
மலிந்துவிட்ட ஊழல் ,
ஆள்பவரின் அதிகார துஷ்ப்ரயோகம்,
ஒற்றுமையின்மை,
ஆஹாஹா எத்தனை மாற்றம்
பலே..... பலே......
உலகெங்கும் போற்றப்பட வேண்டிய சுதந்திரம்
எதையும் எதிர்க்க திராணியற்று
உள்வீட்டு முற்றத்தில் முடங்கி போனதேனோ...?
உயிர்த்தியாகம் செய்துப்பெற்ற சுதந்திரத்தை
உயிராய் மதிக்க வேண்டிய சுதந்திரத்தை
உதாசீன படுத்த துனிவதேனோ......?
சுதந்திரத்தை உதாசீன படுத்துவோரே
முதுகொடிந்து முடங்கி போனோரே
இன்னல் களைந்திட
இனி ஒரு அண்ணல் வரபோவதில்லை
இதுவரை முடங்கியது போதும்
இனியாவது சிந்தி செயலில் இறங்கு
சுபாஷ் வழி நின்று அடைவோம்
மீண்டும் ஒரு சுதந்திரம்......!!
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள் இரசித்தேன்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Nandri ruban anna
ReplyDeleteNandri ruban anna
ReplyDelete