சிறகாக்க வந்துவிடு....!

மையிட்ட உன் பார்வை 
மைய்யல் கொள்ள வைக்குதடி 
மருங்கி மருங்கியே சென்றாலும் 
மருங்காது பார் என சொல்லுதடி 

இமைக்காத உன் பார்வை 
இனிமை கொள்ள வைக்குதடி 
இமைக்காமல் பார்த்தாயானால் இதயம் 
இடிந்துதான் போகுமடி 

இந்த பார்வை பார்த்தாயானால் 
இந்த பாவிமனம் மிரளுதடி 
இந்தகணம் முதல் எங்கு காணினும் 
உந்தன் நயன பார்வையே தெரியுதடி 

பருவம் பூத்த நளின மேனி 
கர்வம் கொள்ள வைக்குதடி - வளைந்த 
புருவத்தில் சிக்கிகொண்ட என்
உருவம் மெலிந்துதான் போகுதடி 

 மருகாத உன் பார்வைக்கு 
உருகாத மனமும் உண்டோடி 
உருகித்தான் போகிறேன் நாளும் 
சருகாக  போவதற்குள் சிறகாக்க வந்துவிடு....!

Comments