விஞ்ஞான வளர்ச்சியை காட்டிலும்
விவசாயம் தேசத்தின் முதுகெலும்பெனினும்
விவசாயிகளின் குறை களையாமல்
விதியற்றிருப்பது நம் தேச சாதனையா...
கணிகையர் பாதுகாப்பு நாளுக்கு நாள்
கேள்விக்குறியாகி கற்பழிப்பும் ,
கலாசாரச் சீரழிவும் இரண்டறக்
கலந்து அச்சுறுத்துவதும் நம் தேசத்தில்தான்
குடி குடியை கெடுக்கும் என்றறிந்தும்
குடியானவனின் குலம் கெடுக்கும்
குடியை அரசே நடத்தி கொண்டிருப்பது
குடியரசு இந்தியாவின் சாதனையல்ல...
குடியரசு தேசத்தில் வளர்ச்சி பலயிருக்க
குறைகளை மட்டும் குறிப்பிடுவது
குடியரசின் தரம் தாழ்த்தவல்ல
குறைகளைய குறிப்புணர்த்தி தேசநலன் காக்க ..!!
வளர்ச்சிப்பல தேசம் கண்டாலும்
கிளர்ச்சி தேசத்தில் ஏற்படாமலிருக்க
காழ்ப்புணர்ச்சி களையவில்லை எனில்
வீழ்ச்சியடைய போவது நம் தேசந்தான்...
அடிப்படை வசதிக் கொஞ்சமும் இல்லாமல்
அடிமைகளாய் அரைநிர்வாணத்தில் வாழும்
அவ்வேழை மக்களின் குறை களைந்து
ஆனந்தமாய் கொண்டாடுவோம் குடியரசை...!!
விவசாயம் தேசத்தின் முதுகெலும்பெனினும்
விவசாயிகளின் குறை களையாமல்
விதியற்றிருப்பது நம் தேச சாதனையா...
கணிகையர் பாதுகாப்பு நாளுக்கு நாள்
கேள்விக்குறியாகி கற்பழிப்பும் ,
கலாசாரச் சீரழிவும் இரண்டறக்
கலந்து அச்சுறுத்துவதும் நம் தேசத்தில்தான்
குடி குடியை கெடுக்கும் என்றறிந்தும்
குடியானவனின் குலம் கெடுக்கும்
குடியை அரசே நடத்தி கொண்டிருப்பது
குடியரசு இந்தியாவின் சாதனையல்ல...
குடியரசு தேசத்தில் வளர்ச்சி பலயிருக்க
குறைகளை மட்டும் குறிப்பிடுவது
குடியரசின் தரம் தாழ்த்தவல்ல
குறைகளைய குறிப்புணர்த்தி தேசநலன் காக்க ..!!
வளர்ச்சிப்பல தேசம் கண்டாலும்
கிளர்ச்சி தேசத்தில் ஏற்படாமலிருக்க
காழ்ப்புணர்ச்சி களையவில்லை எனில்
வீழ்ச்சியடைய போவது நம் தேசந்தான்...
அடிமைகளாய் அரைநிர்வாணத்தில் வாழும்
அவ்வேழை மக்களின் குறை களைந்து
ஆனந்தமாய் கொண்டாடுவோம் குடியரசை...!!
Comments
Post a Comment