அழகோவியம்


தங்கச்  சங்கிலி அங்க மிளிர்கையில்
மின்னும் பைங்கிளி அணிந்து வருகையில் 
அணங்கவள் முகத்தின் மோக பார்வையின் 
அலாதி பிரியத்தில் அயர்ந்து போகிறேன்..


இந்திர சபை மன்மத ரதியின் 
மந்தாரை செம்பூ இதழில் அரும்பும் 
மந்திர நகைப்பினில் இந்த சுந்தரனும் 
அந்தரம் அடைகின்றேன் சுந்தரியே....

அன்னநடை பயின்று வரும் நடையினில் 
அசைந்து இசைந்து வரும் இடையினில் 
மேனியில் பொருந்தி கவர்ந்திடும் உடையினில் 
மெய்மறந்து போகிறேன் இரவினில்...

கூர்ந்து அவள் நோக்கிடும் விழிகளில் 
அர்த்தம்  ஆயிரம்  பொதிந்திடும் போதினில் 
வர்ணிக்க வார்த்தை இல்லை மொழியினில் 
பிரம்மனின்  அறிய படைப்பின் மீதினில் 
கர்வம் கொள்கின்றேன் இறுதியில்..!!


Comments