விடியல் தொட்டுவிடும் தூரமே




விடியலுக்கான தூரம்
விண்ணளவு இருந்தபோதும்
விழிப்புடன் முன்னேறும் வேளையில்
விசித்திரம் நிறைந்த உலகின்
விந்தை விளையாட்டில்
விரோதம் குரோதமாகி
விலைமகன் விஷக்கிருமியை பரப்பிவிட்டு
வினை விதைத்து
விஷமம் செய்துவிட்டான்...

விஷமத்தின் பலனாய்
விஞ்ஞாணமும் முடங்கியது
விமானமும்  முடங்கியது
விளையவைத்த விவசாயமும்
முடங்கியது..
விலைவைக்கும் வியாபாரமும் முடங்கியது
வினோத சூழலைக் கண்டு
விமோட்சனமின்றி செய்வதறியாமல்
விசனபட்டு போனோம்..

விபரீதம் பலவகையில் வந்துசேர
விடியல் கான காத்திருந்த நமக்கு
விலகியிரு, வீட்டிலிரு, தனித்திருவென்றதும்
விருப்பமில்லை எனினும்
விடிந்ததும் முடங்கி போகும்
விட்டில் பூச்சிகள் போல்
வீட்டில் அடைபட்டு போனோம்..
வினாவிற்கு விடைதெரியாத குழந்தைகளாய்
விபரீதத்தை கண்டு தவித்தோம்..

விமோட்சனம் வரும் வேளையில்
வில்லிலிருந்து புறம்வரும்
விஜயனின் அம்புபோல்
விழிப்புடன் செயல்படுவோம்..
விடியல் தொட்டுவிடும் தூரமே
விசுவாசம் கொள்
விநாயகன் அருள் கிட்டி
விக்கணங்கள் களைந்து
வின்னின் மழைத்துளிபட்டு
விதைகள் முளைவிடுவது போல்
விடியலில் முளைத்திடும் விடிவெள்ளியைபோல்
விடியலை எட்டி ஒருநாள்
விண்ணில் பிரகாசிப்போம்...!!

Comments